பிரம்மன்
கவி எழுத முயன்ற போது
தவறி வடித்த
ஓவியச்சிற்பம்
உன் இதழ்கள்!
உன் அழகை
எட்டிப்பார்த்தால்
கவிதை!
உள் சென்று பார்த்தால்
காதல்!
உன்னை ரசிக்கும்
"ஆயிரத்தில்" ஒருவனாக
நான்!
உன்னை மட்டுமே ரசிக்கும்
"ஒருவனில்" ஒருவனாகவும்
நான்!!
எனக்கு சொந்தமான
உன் மேலுதட்டை
முத்தமிடாமல் இருக்கச்சொல்
உன் கீழுதட்டை !!
நான்
கடைசியாக படித்த
இருவரிக்கவிதை
உன் இதழ்கள் தான்!
உன்னை இதழ் பார்த்து
வெட்கி சிவந்த
பூக்கள்
இன்னும்
சிவப்பு ரோஜாக்களாகவே
பூக்கின்றன!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment