Monday, December 8, 2008

மாற்றான் தோட்டத்து...!

மாற்றான் தோட்டத்து...! மல்லிகை அல்ல!

சிற் எறும்பும் கறையானும்
இடம் மாறிக் கொள்கின்றன
மழை வரும் என்பதை - முன்கூட்டியே
தெரிந்துகொண்டதால்!

குளம் வற்றிப் போனதால்
நாரைகள் இடம் மாறிக்கொள்கின்றன
தமது இருப்பை உறுதிப்படுத்திக்கொள்ள!

மின்மினிப் பூச்சிகளால்
ஒளியேற்றுக் கொள்கின்றன
தூங்கனாங் குருவிகள்
தமது இருப்பை உறுதிப்படுத்த!

உன்னால் மட்டுமே...!
ஏன் நண்பா...?...?
உனது இருப்பை
உறுதிப்படுத்த முடியவில்லை...!

காக்கையின் கூட்டிக்குள்
குயிலாகவும்
கறையான் புற்றுக்குள்...?
கருநாகமாகவும்!
மாமரம் மீது
குருவிச்சையாகவும்
ஒட்டுண்ணி வாழ்க்கை
வேண்டாம் உனக்கு!

சுயமாய் முடிவெடு
சுடுகலன் ஏந்தி
போர்தொடு
எமது நாடு
எமக்கே சொந்தம்!

பகை வந்து
பறிபோக - இது
மாற்றான் தோட்டத்து
மல்லிகை அல்ல

No comments: