கொல்லாமல் கொல்லும்
கண்ணே
தாழம்பூ நாகமடி நீ
உன் மெய்யான அன்பெங்கே
பொய்யாகிப் போனதெப்போ
விஞ்ஞான உலகென்பதால்
விலை பேசி வித்தாயோ
மணல் வீடு கட்டவில்லை
மழை கண்டு அஞ்சுதற்கு
மாளிகை கட்டவில்லை
புயல் மையம் கண்டு துடிப்பதற்கு
ஆராதனைக்குரியவளே
நீயும் நானும்
இணைந்து கட்டியது தானே
இந்தக் காதல் கோட்டை
ஏன் தகர்த்தாய்
இது ராஜமாளிகை அல்ல
மீண்டும் கட்டுதற்கு
துடிக்குதடி நெஞ்சம்
தகர்த்தது நீ என்பதால்
என் செய்வேன் உன்னை
நீ வாழும் நெஞ்சத்தை கொல்கிறேன்
கோடுபோட்டு வாழ கூசுதடி நெஞ்சம்
கூடிவாழ்ந்த காலம் போதுமடி கிளியே
கூடு விட்டு ஆவி போனால்
கூடும் இடத்தில் காண்போம் சமரசம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment