ஊர் இல்லை
உறவு இல்லை
உண்ண உணவில்லை
படுத்துறங்க இடமும் இல்லை
உடுத்த ஆடையுடன் ஓட ஓட
திரிகின்றேன் நான் ஒரு ஏதிலி
தெருத்தெருவாய் அலைந்தேன்
என் தேசம் எல்லாம் திரிந்தேன்
தெருவில் உள்ள மரமும்
குளக்கரையும் உறவாகியது எனக்கு!
என் ஊரில்
என் இல்லத்து முற்றத்தில்
ஓடி விளையாடிய என்
குஞ்சுகள் எங்கே
பத்து மாதம் சுமந்தேன்
பெற்றெடுத்த நாளில் இருந்து
பல கனவோடு வளர்ந்தேன்
நான் ஒரு ஏழை.
கயவன் அவன் கண் என் முன்
பிள்ளையைக் கொன்று அழித்தானே
எனக்கேன் இந்த அவலம்?
நாமும் எம் வாகனத்தில் விரைவில்
பறவைகள் போல் வட்டமிடுவோம்
வாணவேடிக்கையும் பூமியில் நிகழ்த்தி
புலர்காலைப் பொழுத்தில்
புன்னகையுடன் எழுந்து
புது ஈழம் வென்றெடுக்க
ஒன்றாய் எழுவோம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment