Monday, December 8, 2008

நீயும் காதலி

நீயும் காதலி nalama???????????????
இனியவளே!
கற்பனையில்
ஒருவனை
காதலித்துப் பார்...!
கால் கடுக்க
காதலனை
பார்க்க
கண்ட இடத்தில் நிற்ப்பாய்;
நெற்றி பொட்டை
நேரா நேரம்
புதியதாக மாற்றுவாய்;
அவன்
விழி இரண்டும்
உனை விழிக்கிறதா?
என்று விழித்து பார்ப்பாய்;
காதலை
சொல்ல
வழி தெரியாமல்
வீட்டு
வழி மறப்பாய்;
தனிமையில்
காதல் ஆட்சி
செய்வதை
இனிமையாக யோசிப்பாய்;
சொல்ல வந்த
வார்த்தையெல்லாம்
மெல்ல மெல்ல
மௌனமாக விழுங்குவாய்;
அவனிடம்
பேசும் போது மட்டும்
வார்த்தை மறப்பாய்;
இப்பொழுது யோசித்துப்பார்...?
உன்னிடம்
காதலை
சொல்ல முடியாமல்
காதலால்
நான் படும்
அவஸ்தைகளை....!

No comments: