Monday, December 8, 2008

வாழி

அன்னையர் செல்வமே வாழி!
தமிழன் முகவரியே வாழி
தானைத் தலைவனே வாழி
குழந்தை மனமே நெஞ்சில்
வளர்த்த வேங்கையே வாழி

மழலைச் சிரிப்பை உதிர்க்கும்
மக்களின் உயிரே வாழி
தம்பி தங்கையர் நெஞ்சில்
தங்கிடும் அண்ணனே வாழி

தாயக உறவுகள் வாழ்த்தும்
தலைவரே நலமாய் வாழி
எண்ணமும் செயலும் எங்கள்
இன்புறு வாழ்வாய் கொண்ட
திண்ணிய கொள்கை தாங்கிய
தேசிய தலைவா வாழி

ஈழத்து அன்னையர் குழந்தையாய்
ஏற்றிடும் செல்வமே வாழி
மழலைகள் தோள்களில் சுமக்கும்
மாண்புடை நெஞ்சனே வாழி

படித்தவர் பாமரர் யார்க்கும்
பாதை காட்டுவோய் வாழி
ஏழைகள் செல்வர்கள் பேதம்
ஏற்காத வேந்தனே வாழி

சாதிகள் சமயங்கள் வேற்றுமை
சாய்த்திட்ட தேவனே வாழி
சூரியப் புதல்வா வாழி
ஈழத்துச் சிற்பியே வாழி

போர்க்கலை நுண்கலை ஒன்றாய்
போற்றிடும் குருவே வாழி
கலையும் பண்பாடும் தமிழர்
கண்ணாய் காப்பவன் வாழி

விஞ்ஞானம் தொழில் நுட்பம் கணனி
வித்தைகள் வளர்ப்போன் வாழி
ஒழுக்கமும் சீலமும் தவறா
உத்தமம் விரும்புவோய் வாழி
என்றென்றும் போற்றிடும் வண்ணம்
எங்களின் தலைவனே வாழி வாழி!

No comments: