Saturday, December 13, 2008

இறைவனே பார்த்துக் கொள்ளட்டும்

யாரையுமே குறைத்து மதிப்பிடாதவள்- நான்
அந்த வேகம் தான் உன்னை காதலிக்க வைத்தது
யாரையுமே ஏமாற்ற விரும்பாதவள்- நான்
அந்த நிலை தான் உண்மை சொல்ல வைத்தது
உன்னில் உயிராய் இருந்தவள்- நான்
அது தான் உறவுகளை விட்டு கொடுக்க வைத்தது
நீ தான் எதிர்காலம்; என்றிருந்தவள்- நான்
ஆனால் நீ ?
நீ தான் கடைசியும் முதலுமென்றாய்
உயிர் என்றாய்
உனை பிரிந்தால் பித்து பிடிக்குமென்றாய்
திருமணம் என்றதும்
இன்னொரு பெண் உன் வலையில் சிக்க இருப்பதைய்
புரிந்து கொண்டு எதையுமே மறைக்காத என்னை
ஏமாற்றி விட்டாய் என்றாய்
உன் நடத்தை சரியில்லை என்றாய்
ஆசை வைத்து தான் பழகினேன் என்றாய்

உன்னை பற்றி உனக்கே தெரியவில்லை
என்னை பற்றி எப்படி தெரிந்திருப்பாய் ?
உன்னிடத்தில் என்ன தான் இருக்கிறது
பணமா? பொருளா ? படிப்பா ? ஏது எனக்கு புரியவில்லை?
எதையுமே மறைக்காத ஒருத்தி உன் அகராதியில் ஏமாற்றியவள்
உன் தேவை தீரும் வரை தீயவர்கள் நல்லவர்கள் என்றாய்
உன் தேவை தீர்ந்த பின் நல்லவர்களயும் தீயவர்களுடன் இனைப்பாய்
திருமணத்துக்கு மட்டும் கேட்காவிட்டால் ????
முடிந்த வரை என்னை வைத்தே உன் தேவைகளை தீர்திருப்பாய்
என்னை சேர்ந்தவர்களை இன்று புறங்குறும் நீ
அன்றே புரிந்துகொண்டாய் எனில்
எதுக்காய் அவர்கள் உதவியை ஏற்றாய் ?
அது எனக்கு புரியவில்லை?
உன் பகையை தீர்பதற்கு என்னை பகடைகாயாகியிருக்கலாம்
ஆனால் உடைந்தது என் மனது
ஆசை வைப்பது காதல் அல்ல
அன்பு வைப்பது தான் காதல்
இறுதியாக ஒன்று மட்டும் சொல்கிறேன்
எந்த தேவாலயத்தில் உன் நலனுக்காக வேண்டினேனோ
அதே தேவாலயத்தில் உள்ள இறைவன் மீது சத்தியம்
செய்கிறேன். உன்னைப் போன்றோரையும் இருவர் காதலிப்பது
தெரிந்தும் இடையில் நுழைவோரையும் அவரே பார்த்து
கொள்ளட்டும்.

No comments: