Monday, December 8, 2008

நீங்கள் இல்லாத என்
மனம் மீண்டும் பசுமைகளை
தேடிப்போகும் இனிமையான
அந்த நாட்களை எண்ணி

வாழ்க்கையில் பெரிய
ஆச்சர்யம் அன்பு
நிறைந்தவர்களை எப்போதாவது
எங்காவது சந்திக்க நேரிடும்

அதுபோல்

நம் சந்திப்பும் நிகழும்
என வேண்டிக் கொள்ளுங்கள்
நம்பிக்கையோடு நாட்களை
நகர்த்துங்கள்
காற்றாவது சுமந்து
வரும் என் முகவரியை.
என்றும் பசுமையான நினைவுகளுடன்

நட்புக்காக,,,,,,,,,,,

நன்றிகடனென கிடக்கும் நட்பில்,
நன்றி சொல்லி பிரியும் சிலர்..

அணை பொங்கி வழியும்
ஆறுபோல கண்கள்,

ஆறாமல் கிடக்கும் மனம்
ஆதிக்க வார்த்தைகளில்..

காலம் கனியும் கண்ணீர் விலகும்
கனல் ஏரியும் கன்னிநட்பரிவர்..


வெள்ளையன் வேட்டையில்
வேர்கண்ட கோட்டைபோல்,

சிதறிய சிநேகத்திலும்
சிதறாத முத்தே நட்பே,

பகிர்ந்ததை பகிர
முடியாமல் பரிதவிப்பது

நட்பிலக்கனமோ இல்லை
நப்பிலக்கனமோ..!

ஆண் பெண் நட்பு....

சாதியில்லை மதமில்லை
காதலுக்கு மட்டும் சொல்லவில்லை

காதலில்லை கர்வமில்லை
கண்களிலோ காமமில்லை,

காசில்லை பணமில்லை
அழகொன்றும் தேவையில்லை,

தொட்டதில்லை கை பட்டதில்லை
சோகத்தில் மடி சாய்ந்தலும்,

தோழனே அதில் ஒன்றும்
தவறே இல்லை,

விழியிலே நதியில்லை
மனதிலே சுமையில்லை

பிரிவொன்று நேர்ந்தாலும்
நம் நட்பு என்றும் அழிவதில்லை.

நான் ஒரு ஏழை

ஊர் இல்லை
உறவு இல்லை
உண்ண உணவில்லை
படுத்துறங்க இடமும் இல்லை
உடுத்த ஆடையுடன் ஓட ஓட
திரிகின்றேன் நான் ஒரு ஏதிலி
தெருத்தெருவாய் அலைந்தேன்
என் தேசம் எல்லாம் திரிந்தேன்
தெருவில் உள்ள மரமும்
குளக்கரையும் உறவாகியது எனக்கு!
என் ஊரில்
என் இல்லத்து முற்றத்தில்
ஓடி விளையாடிய என்
குஞ்சுகள் எங்கே
பத்து மாதம் சுமந்தேன்
பெற்றெடுத்த நாளில் இருந்து
பல கனவோடு வளர்ந்தேன்
நான் ஒரு ஏழை.
கயவன் அவன் கண் என் முன்
பிள்ளையைக் கொன்று அழித்தானே
எனக்கேன் இந்த அவலம்?
நாமும் எம் வாகனத்தில் விரைவில்
பறவைகள் போல் வட்டமிடுவோம்
வாணவேடிக்கையும் பூமியில் நிகழ்த்தி
புலர்காலைப் பொழுத்தில்
புன்னகையுடன் எழுந்து
புது ஈழம் வென்றெடுக்க
ஒன்றாய் எழுவோம்

மாற்றான் தோட்டத்து...!

மாற்றான் தோட்டத்து...! மல்லிகை அல்ல!

சிற் எறும்பும் கறையானும்
இடம் மாறிக் கொள்கின்றன
மழை வரும் என்பதை - முன்கூட்டியே
தெரிந்துகொண்டதால்!

குளம் வற்றிப் போனதால்
நாரைகள் இடம் மாறிக்கொள்கின்றன
தமது இருப்பை உறுதிப்படுத்திக்கொள்ள!

மின்மினிப் பூச்சிகளால்
ஒளியேற்றுக் கொள்கின்றன
தூங்கனாங் குருவிகள்
தமது இருப்பை உறுதிப்படுத்த!

உன்னால் மட்டுமே...!
ஏன் நண்பா...?...?
உனது இருப்பை
உறுதிப்படுத்த முடியவில்லை...!

காக்கையின் கூட்டிக்குள்
குயிலாகவும்
கறையான் புற்றுக்குள்...?
கருநாகமாகவும்!
மாமரம் மீது
குருவிச்சையாகவும்
ஒட்டுண்ணி வாழ்க்கை
வேண்டாம் உனக்கு!

சுயமாய் முடிவெடு
சுடுகலன் ஏந்தி
போர்தொடு
எமது நாடு
எமக்கே சொந்தம்!

பகை வந்து
பறிபோக - இது
மாற்றான் தோட்டத்து
மல்லிகை அல்ல

வாழி

அன்னையர் செல்வமே வாழி!
தமிழன் முகவரியே வாழி
தானைத் தலைவனே வாழி
குழந்தை மனமே நெஞ்சில்
வளர்த்த வேங்கையே வாழி

மழலைச் சிரிப்பை உதிர்க்கும்
மக்களின் உயிரே வாழி
தம்பி தங்கையர் நெஞ்சில்
தங்கிடும் அண்ணனே வாழி

தாயக உறவுகள் வாழ்த்தும்
தலைவரே நலமாய் வாழி
எண்ணமும் செயலும் எங்கள்
இன்புறு வாழ்வாய் கொண்ட
திண்ணிய கொள்கை தாங்கிய
தேசிய தலைவா வாழி

ஈழத்து அன்னையர் குழந்தையாய்
ஏற்றிடும் செல்வமே வாழி
மழலைகள் தோள்களில் சுமக்கும்
மாண்புடை நெஞ்சனே வாழி

படித்தவர் பாமரர் யார்க்கும்
பாதை காட்டுவோய் வாழி
ஏழைகள் செல்வர்கள் பேதம்
ஏற்காத வேந்தனே வாழி

சாதிகள் சமயங்கள் வேற்றுமை
சாய்த்திட்ட தேவனே வாழி
சூரியப் புதல்வா வாழி
ஈழத்துச் சிற்பியே வாழி

போர்க்கலை நுண்கலை ஒன்றாய்
போற்றிடும் குருவே வாழி
கலையும் பண்பாடும் தமிழர்
கண்ணாய் காப்பவன் வாழி

விஞ்ஞானம் தொழில் நுட்பம் கணனி
வித்தைகள் வளர்ப்போன் வாழி
ஒழுக்கமும் சீலமும் தவறா
உத்தமம் விரும்புவோய் வாழி
என்றென்றும் போற்றிடும் வண்ணம்
எங்களின் தலைவனே வாழி வாழி!

இருவரிக்கவிதை

பிரம்மன்
கவி எழுத முயன்ற போது
தவறி வடித்த
ஓவியச்சிற்பம்
உன் இதழ்கள்!

உன் அழகை
எட்டிப்பார்த்தால்
கவிதை!
உள் சென்று பார்த்தால்
காதல்!

உன்னை ரசிக்கும்
"ஆயிரத்தில்" ஒருவனாக
நான்!
உன்னை மட்டுமே ரசிக்கும்
"ஒருவனில்" ஒருவனாகவும்
நான்!!

எனக்கு சொந்தமான
உன் மேலுதட்டை
முத்தமிடாமல் இருக்கச்சொல்
உன் கீழுதட்டை !!

நான்
கடைசியாக படித்த
இருவரிக்கவிதை
உன் இதழ்கள் தான்!


உன்னை இதழ் பார்த்து
வெட்கி சிவந்த
பூக்கள்
இன்னும்
சிவப்பு ரோஜாக்களாகவே
பூக்கின்றன!